மொழி மாற்றம் செய்ய இங்கே வரவும் .

Friday, September 9, 2011

நெட் வொர்க் பிசினஸ் .கடைசிக்கால ஆபத்துக்கள்


ஐயோ ' பிசாசானவன் தனக்கு கொஞ்ச காலம் மாத்திரம் உண்டென்று அறிந்தது பயங்கரமாக கிரியை செய்து வருகிறான்.தற்போது பிசாசு என்று கூறப்படும் லூசிபரும் அவனுடன் தள்ளுண்ட தூதர்களும் தங்கள் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் .முடிவை அறிந்த பொல்லாதவர்கள் உலகை பல வழிகளில் மோசம் போக்குகிறார்கள் .

ஆம் அண்மைக்காலமாக புதுவித பிசினஸ் எமது கிழக்குப் பிரதேசங்களில் பரவி வருகிறது .நெட் வொர்க் முறையின் மூலம் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது .இது பற்றி என்னிடம் ஒருவர் விபரித்த போது எவ் வித பிரச்சினையும் இல்லாத நல்ல முறையாகத்தான் தெரிந்தது .வேத வெளிச்சத்தில் இதை ஆராயும் போது அநேக உண்மைகள் புதைந்து கிடக்கின்றது .ஆம் வேதம் கடைசி நாட்களில் ஆட்சி செய்யப்போகும் ஒருவனைக் குறித்து சொல்லும் போது அவன் தந்திரமாக உலகை தன வசப்படுத்துவான் என்று சொல்லுகிறது .அவன் முழு உலகையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்து ஆரம்பத்தில் நல்லது செய்வது போல் பாசாங்கு செய்து பின் உலக ஜனங்களை வேதனைப்படுத்துவான் என்று போதிக்கிறது .இந்த நெட் வொர்க் பிசினஸ் உலகை ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் ஒரு தந்திரமாகும் இது எப்படி ஆகும் என்று ஜோசிக்கிறீர்களா ஆம் இது இயலும் முழு உலகிலும் இந்த சிஸ்டம் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது .கர்த்தரை அறிந்த சிலரும் இதில் பங்குதாரர்கள் ஆகவிட்டார்கள் என்பது வேதனை .சில வஞ்சக மனிதர்கள் கிருஸ்த்துவின் ஊழியர்களையும் இதில் சிக்க வைத்துள்ளார்கள் .

                                                                                                                                                           அன்பான தேவனுடைய பிள்ளைகளே இப்படிப்பட்ட வருமானம் வந்தால் நீங்கள் எப்படி கிறிஸ்த்துவை விசுவாசிக்கப் போகிறீர்கள் நாம் காண்கிறதை விசுவாசிக்க வேண்டுவதென்ன .பணம் உங்களுக்கு வந்து கொண்டிரிந்தால் எப்படி ஜேசுவில் விசுவாசம் வைப்பீர்கள் .ஆம் ஜேசு சொன்னார் "நான் வரும் நாட்களில் விசுவாசத்தை காண்பேனோ "என்று எவ்வளவு உண்மை அது .பிசாசு நடத்தும் இந்த கடைசிக்கால யுத்தம் மனோ தத்துவ போராகும் .மன ரீதியான யுத்தத்தை பிசாசு பூமியில் கட்டவிழ்த்து விட்டிருக்கிறான் வேதம் சொல்கிறது "தெரிந்து கொள்ளப்பட்டவர்களே வஞ்சிக்கப்படும் அளவுக்கு காரியங்களை நடப்பிப்பான் சிலர் வஞ்சிக்கப்படுவார்கள் " என்று இந்த வஞ்சனையில் விழுந்து விட வேண்டாம் .இதில் நீங்கள் சிக்குண்டிருந்தால் உடனே விலகவும் இதைப்பற்றி யாராவது பேசினால் கர்த்தருடைய வசனங்களைப் போதியுங்கள் .உடனே முழங்கால் படியிட்டு தேவனிடம் இந்த தந்திரத்தில் தேவ பிள்ளைகள் சிக்கிக்கொள்ளாதபடியும் வேறு மனிதர்கள் தேவனுடைய வெளிச்சத்தில்  வரும் படியும் ஜெபிக்கவும் .கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.ஆமென் .

No comments:

Post a Comment