மொழி மாற்றம் செய்ய இங்கே வரவும் .

Wednesday, August 31, 2011

நம்பிக்கை

இதை வாசிக்கும் சகோதரனே .மனிதர்கள் தங்கள் வாழ்வில் பல காரியங்களில் நம்பிக்கை வைக்கிறார்கள் .பணத்தின் மீதும் ,உதவுவார்கள் என்று தாங்கள் கருதும் மனிதர்கள் மீதும் இன்னும் அநேக காரியங்களிலும் மனிதர்களின் நம்பிக்கை ஊடுருவுகிறது .உண்மையில் நாம் எதை நம்ப வேண்டும் .
வேதம் எரேமியா 17.7 இல் சொல்கிறது கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து கர்த்தரைத் தன்னம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான் .சில வேளைகளில் நம்முடைய சூழ்நிலை நமக்கு எதிராக இருந்தாலும் பயப்பிட வேண்டாம் .அந்த நேரத்தில் கர்த்தரை நம்பு அவர் காரியங்களை வைக்கப் பண்ணுவார் .ஒரு வேழை நீ கர்த்தரை அறியாதவனாய் இருக்கலாம் .அப்படியாயின் இன்றே ஜேசுவை அறிய உன் நேரத்தைக் கொடு வானத்தையும் பூமியையும் உன்னையும் உருவாக்கின தெய்வம் உனக்கு வெளிப்படாமல் இருக்கமாட்டார் .ஒரு மத கதையாக நான் இதை உனக்கு சொல்லவில்லை அனுபவித்து சொல்கிறேன் நானும் ஒரு இந்துவாக இருந்து ஜேசுவை ஏற்றுக்கொண்டவந்தான் ,நான் மதம் மாறவில்லை என்னை உருவாக்கினவரை அறிந்தது அவருடைய வழியில் நடக்கிறேன் .அந்த நாட்களில் நான் ஜேசுவை எதிர்த்தவந்தான் என்னை அவர் மன்னித்து ஏற்றுக்கொண்டார் ,உன்னையும் ஏற்றுக்கொள்வார் .அவர் தன்னிடத்தில் வருகிறவர்களை புறம்பே தள்ளுவதில்லை .அவர் ஒருவனுடைய தகமைகளைப்பார்த்து இரங்குவதில்லை "குப்பையில் இருக்கிறவனை எடுத்து சிங்காசனத்தில் அமர்த்துகிற தேவன் அவர் .ஜேசுவைப் பற்றி சந்தேகம் இருந்தால் நல்ல ஒரு போதகரை சந்திக்கவும் அல்லது என்னோடு தொடர்பு கொள்ளவும் எனக்கும் நிறைய சந்தேகங்கள் இருந்தது  கர்த்தரே எல்லாவற்றையும் தெளிவுபடுத்தினார் .எரேமியா 17.5 சொல்கிறது "மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து மாம்சமானத்தை தன் புயபலமாக்கிக்கொண்டு ,கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்" என்பதாக .நம்மைப்படைத்த கடவுள் தன்னை வெளிப்படுத்தாமல் இருக்கவில்லை நாம்தான் அறிவில்லாமையால் கர்த்தரை தூரமாக்குகிறோம் ஆனால் அவர் நமக்கு சமீபமாகவே உள்ளார் .ஆகவே அன்பு சகோதரனே உன் நம்பிக்கை இன்று முதல் கர்த்தரில் இருப்பதாக .சில வேலை நீ ஒரு பெயர்க்கிரிஸ்த்தவனாக வாழ்ந்தது கொண்டிருக்கலாம் .இன்றே உன் வாழ்வு மாற வேண்டுமென நான் ஜெபிக்கிறேன் .இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய கர்த்தாவே வாசிக்கிற இந்த மகனின் மனக்கண்களை திறப்பீராக .இன்று முதல் இவர் உம்மை மாத்திரம் நம்பி வாழ வேண்டுமென ஜேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே .ஆமென் .

No comments:

Post a Comment