மொழி மாற்றம் செய்ய இங்கே வரவும் .

Tuesday, July 3, 2012


சர்வாயுதவர்க்கங்களாவன  Whole full armor of God
1.சத்தியம் என்னும் கச்சை - The Belt of Truth
2.நீதியென்னும் மார்க்கவசம் - The Breastplate of Righteousness
3.சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சை - The Shoes of the Gospel of Peace
4.விசுவாசமென்னும் கேடகம் - The shield of faith
5.இரட்சணியமென்னும் தலைச்சீரா - The Helmet Of Salvation
6.தேவவசனமாகிய ஆவியின் பட்டயம் - The Sword of the Spirit,The Word of God.


எபேசியர்:6

11. நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.
12. ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.
13. ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
14. சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும் நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்;
15. சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்,
16. பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.
17. இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
18. எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.

Friday, September 9, 2011

நெட் வொர்க் பிசினஸ் .கடைசிக்கால ஆபத்துக்கள்


ஐயோ ' பிசாசானவன் தனக்கு கொஞ்ச காலம் மாத்திரம் உண்டென்று அறிந்தது பயங்கரமாக கிரியை செய்து வருகிறான்.தற்போது பிசாசு என்று கூறப்படும் லூசிபரும் அவனுடன் தள்ளுண்ட தூதர்களும் தங்கள் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் .முடிவை அறிந்த பொல்லாதவர்கள் உலகை பல வழிகளில் மோசம் போக்குகிறார்கள் .

Wednesday, August 31, 2011

நம்பிக்கை

இதை வாசிக்கும் சகோதரனே .மனிதர்கள் தங்கள் வாழ்வில் பல காரியங்களில் நம்பிக்கை வைக்கிறார்கள் .பணத்தின் மீதும் ,உதவுவார்கள் என்று தாங்கள் கருதும் மனிதர்கள் மீதும் இன்னும் அநேக காரியங்களிலும் மனிதர்களின் நம்பிக்கை ஊடுருவுகிறது .உண்மையில் நாம் எதை நம்ப வேண்டும் .

ஆரம்பமாகும் கடைசிக்கால எழுப்புதல் .

சகோ.அல்வின் தோமஸ் அவர்கள் கல்முனைப்பிரதேசத்தில் நடாத்திய பிரீடம் கூட்டங்களில் பெருமாரியாக ஆவியானவர் இறங்கி ஜனங்களை அபிசேகித்தார்.

Sunday, August 28, 2011

ஞானஸ்நானம் என்றால் என்ன ?

ஞானஸ்நானம் என்றால் என்ன என்பதுவும் எதற்காக கிறிஸ்த்தவர்கள் இதை எடுக்கிறார்கள் என்பதுவும் பற்றி அநேகருக்கு சரியாக புரியவில்லை .
(உள் நுழைக.)

ஞானஸ்நான ஆராதனை

மட்டக்களப்பு ஜெப வீடு சபையின் ஞானஸ்நான ஆராதனை  28.08.2011  அன்று நடைபெற்றது .சுமார் 22 பேர் ஞானஸ்நானம் பெற்றார்கள் .கிறிஸ்த்துவுக்குள் மறுபடியும் பிறந்த இவர்களை சபையாரும் ஊழியர்களும் ,உள்ளத்தின் ஆழத்தில் இருந்து ஆசிர்வதித்தார்கள் . 

3வது ஆண்டுநிறைவுவிழா

மட்டக்களப்பு எல்லை வீதி தெற்கு தாண்டவன்வெளியில் உள்ள ஜெப வீடு கிருஸ்த்தவ சபையின் 3வது ஆண்டுநிறைவுவிழா 28.08.2011 அன்று நடைபெற்றது .இதில் சகோதரர் அல்வின் தாமஸ் உடைய தகப்பனார் கர்த்தருடைய செய்தியை பிரசங்கம் செய்தார் .ஆராதனையின் முடிவில் ஐக்கிய உணவு வழங்கப்பட்டது .

Monday, August 15, 2011

இவர்தான் ரட்சகர்

மனிதனை பாவத்தில் இருந்து விடுவிக்க தேவன் மனிதனாக பூமிக்கு வந்தார் .இது பற்றி விரைவில் உங்கள் பார்வைக்கு ......... ரூபன் 

ஜேசுவின் அன்பு

கர்த்தராகிய ஜேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன் . ஜேசுவின் அன்பு எனும் இந்த தளத்தில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.